Thursday, May 5, 2011

நன்றி மறந்தவன்...


காலம் எல்லாம் அவர் காலடியில்
காத்திருந்தேன் நல்ல துணையாக
கருப்பு என்று பேசி பேசி இணையாக
பலதேசம் கூட்டி சென்றார் -இன்றோ
அவரோடு சேர்ந்து நான் அலைந்து
...அடி நொந்து ஏலாமல் போனதனால்
பழசென்று என்னை ஒதுக்கி புதிதாக
சிவப்பென்று புதுத்துணை நாடி வடிவத்தில்
அழகென்று இவர் மயங்கி காரினிலே
ஏற்றிவந்தார் நாளை இவர் நடக்க நடக்க
அந்த துணையும் தேய்த்து போகும் பழசாகும்
என்னை போலவே என்றது பழைய செருப்பு !!!! 




மீசை முளைக்காத அவர் வயதில்
ஆசையுடன் அவர் படுத்தெழும்ப
வாசல் முதல் திண்ணை வரை
முத்தம் இட்டு நான் துடைத்தேன்
காசு உழைக்கும் ஆசையிலே
...கனடா சென்று வந்த மச்சான்
ஊர் வீடு வந்த பொழுதினிலே
கூட கொண்டுவந்த கூவறினால்
வீடெல்லாம் முத்தம் இட்டு
காலமெல்லாம் காத்திருந்த என்னை
கஸ்ரப்படுத்தி அடித்து உடைத்து
குப்பையிலே எறிந்து விட்டான்
என புலம்பியது பழைய தும்புத்தடி !!!!



எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை

2 comments: