Friday, June 17, 2011

பெண் அடிமை


இதிகாச இலக்கியங்களில் பெண் அடிமை

அயோத்தியின் அந்த புரத்திலே அறுபதுனாயிரம்
மனைவியருடன் அற்பசுகம் கண்டவன் தான்
மனுநீதி வளர்த்த வழியில் வந்த தசரத மகராஜன்
அதில் அன்புக்கு இனியவள் கைகேயிக்கு வரம்
அளித்து புத்திர சோகத்தில் தன் உயிரை விட்டு
அத்தனை பெண்களையும் ஏமாற்றியவன் தசரதன்!!

இராமனின் சுயநலத்தில் இராவணனின் பெண்ஆசையில்
ஈழத்தமிழ் பெண்கள் அன்றும் ஆரியத்தால் விதவை
ஆக்கப்பட்டு காடுகளில் அலைய விடப்பட்டார்கள்
காப்பாற்றி கூட்டி சென்ற சீதையை கூட அந்த ராமன்
பாரதத்தில் நடுக்காட்டில் அடி வயிற்றில் வளர்ந்த தன்
குழந்தைகளுடன் அலைய விட்டான் என்கிறது ராமாயணம் !!

மாயக்கண்ணனவன் ஆயர்குலத்திலே ஆடிபாடி
மாயங்கள் பலசெய்து அறுபதுனாயிரம் கோபியரை
மயக்கி மணம் செய்து லீலைகள் பல புரிந்து
சோலைகளில் தவிக்க விட்டு விட்டு மாயமாக
மறைந்து விட்டான் அங்கும் பேதையாக பெண்கள்
ஏமாற்றத்துடன் வாழ்விழந்து போனார்கள் !!!!

கங்கையை மணந்தும் பெண் ஆசை மேன்மையால்
தேவவிரதனை (பீஷ்மன் )சத்தியம் செய்ய வைத்து
சத்தியவதியை சரித்திரத்தில் மனைவியாக்கி
அத்தனை பெண்களையும் அநாதை ஆக்கிய மகா
பாரத போருக்கு வித்திட்டவன் பெண் ஆசையில்
மயங்கிய சந்திர வம்ச சந்தனு மகாராஜன் !!!!

சுயவரத்தில் அம்பால் மச்சைய யந்திரம் வீழ்த்தி
அர்ச்சுனன் வென்று அழைத்து வந்த பாஞ்சாலியை
தாயவள் குந்தியின் வாய் மொழித்தவர்றினால்
வாசு தேவகிருஷ்ணனே அங்கும் ஐவருக்கும்
அவளை மனைவியாக்கி உலகில்ஒவ்வாத செயலை
உருவாக்கி பெண் அடிமையை உயர்த்தியது பாரதம் !!

1 comment: