Thursday, May 12, 2011

கருணை உனக்கு இருந்ததா?




தாயே கருணை உனக்கு இருந்ததா !!!!!!!!!

உண்மைகள் சொன்னவர்கள் உயர்வாக
உள்ளத்தில் நேர்மையுடன் உல்லாசமாய்
உலகெல்லாம் வாழவில்லையா -உனது
...உயிருக்குள் கலந்த அந்த குழந்தை உறவின்
உருவை அழித்து இந்நாட்டு விசா தேவையா !!

ஆயிரம் உண்மை காரணம் இருக்கு-சுவிஸ்சில்
அகதி என்று நீ அந்தஸ்து பெறுவதற்கு -நீயோ
ஆமி கெடுத்ததால் ஆனதென்று சொல்வதற்காய்
அருமையான ஐந்து மாத உன் குழந்தையை-அம்மா நீ
அடிவயிற்றில் வைத்தே அழித்து விடுகின்றாயே !!

கல்லான கணவனின் செல்லாத வார்த்தையை
கருதி அந்த பொல்லாத வேலையை செய்து நீயே
கணவன் அணுவில் உருவாகிய உன் மழலையை
கருவில் இருந்தே கல்லறைக்கு அனுப்பினாயே
கருகிய அந்த சிசுவின் பாவம் உன்னை வாழவிடாது !!

பாவி மகள் நீ பாவத்தை செய்து விட்டு
பாலாவி தீர்த்தத்தில் பல முறை நீந்தினாலும்
பலகோவில்கள் படி ஏறி இரந்து கேட்டாலும்
பச்சிளம் குழந்தையை பதை பதைக்க கொன்ற
பாவம் தீராத பழியாக எழு பிறப்பும் தொடர்ந்து வரும் !!

பிள்ளை இல்லை என்று சொல்லி -இன்றோ
பிள்ளைவரம் வேண்டி திருக்கோவிலில் -நீ
வன்னி மரத்தில் கட்டிய வண்ணத்தொட்டில்
கண்ணெதிரே கட்டவிழ்ந்து விழுகின்றதே
காரணம் தான் நெஞ்சகத்தில் உனக்கு புரிகின்றதா !!

எல்லை இல்லா பரம் பொருளே -ஏன்
என்னை சோதனை செய்கின்றாய் -என்று
கடவுளே உனக்கு கருணை இல்லையா என
கண்ணீர் விட்டு கதறி அழுகின்றாயே -அன்று
கருணை உனக்கு இருந்ததா? எண்ணிப்பார் தாயே !!!


எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை

1 comment: