Friday, June 17, 2011

முதுமை


என் அருமை பிள்ளைகளே கொஞ்சம் நில்லுங்கள்
என் ஆசை பேரக்குழந்தைகளிடமும் சொல்லுங்கள்
பொக்கை வாய் வந்தும் தனிமையில் வாடும் உங்கள்
பெற்றதாய் இங்கு படும் உடல் உள வேதனையை !!!!

கலாசாலைகளில் கற்றறிந்த என் கண்மணிகளே
கட்டிய என் கணவன் உயிர் பிரிந்து போனபின்னாவது
கண் கலங்காது பெற்றதாயை பார்க்கவேண்டுமென
கடைசிவரை உங்கள் உள் உணர்வு உணர்த்தவில்லையா!!!

நான் கடைசியாக செல்லமாக வளர்த்த கறுப்பு
நாயின் குட்டிகள் கூட பல வேளைகளில் வந்து
நம் வீட்டில் காவல் காக்கும் அந்த தாயை (நாயை)
நலம் விசாரித்து செல்கின்றது நான் மட்டும் தனிமையில்!!!

நாளைய பொழுதினில் நான் நிரந்தரமாய்
கண்ணுறங்கி விட்டால் நாலு நாளின் பின் வந்து
கல்லறையில் வீசும் எரிந்த என் உடலின் சாம்பல்
காற்றிடம் கேளுங்கள் என் கண்ணீரின் வலிமையை !!!

No comments:

Post a Comment