Friday, June 17, 2011

பாசம்


தத்தி தத்தி தடம்நோக நான் நடக்க-உன்
தலை அருகே உல்லாசமாய் நாய் இருக்க
கத்தி கதறி நான்அழும் வேளையிலே -உன்னை
கட்டி பிடித்தபடி நாய் என்னைபார்த்து சிரிக்கின்றதே!!

நம்பி உன் வயிற்றில் பிறந்த என்னை
நன்றி இல்லாபிள்ளையாக வளர்க வென
நடு ரோட்டில் இழுத்து செல்கின்றாயே
நண்பன் என நாயை தோளில் தூக்கியபடி !!

நாய்க்கு உண்டு நன்றி என்பது உண்மைதான் -என்
தாய்க்கு இல்லை பாசம் என்பதும் உண்மையா !!!!!!

No comments:

Post a Comment