Saturday, December 21, 2013

புகை நமக்கு பகை

புகை நமக்கு பகை 


விருப்போடு பற்ற வைத்து
நெருப்போடு உறவாடும் நெஞ்சங்களே
உதட்டோடு யமனை வைத்து
உயிரோடு போராடும் உறவுகளே ,,,

கருவாக்கி உன்னை உருவாக்கி 
மகவாக்கி மடிமீது தாலாட்டிய தாயும்
மனையாகி வந்து மகிழ்வாக்கி உன்னை
உறவாக்கி உணர்வில் கலந்த உறவும் ,,,
தனியாக நின்று நாளை தவிக்க
தரம் கெட்ட தணியாத தாகம் என
உருவாகி வந்து உயிர் கொல்லும்
உதவாத புகை ஆற்றல் தேவையா ,,,,,
,
,,,சிவமேனகை ,,,,,

No comments:

Post a Comment