அப்பாவின் வரவுக்காக
தந்தை முகம் காண
தவிக்கிறது பிள்ளை
உந்தன் விழி நுகர
துடிக்கின்றது என் உள்ளம் ,,,
எங்கள் நிலை புரிந்தும்
எங்கே அப்பா சென்றாய்
முந்தை வினை முடித்து
விரைவாய் ஓடி வருவாய் ,,,
பாலகியாய் தோள் தாவி
பாடி திரிந்த உன் மகள் இன்று
பாவையாகி நின்று எதிர்
பார்க்கின்றாள் உன்வரவை ,,,
பூக்குட்டியாய் நீ தினமும்
பூசூடி அழகு பார்த்த அவள்
புலரும் பொழுதெல்லாம்
பூவிழியாலே உன்னை தேடுகிறாள் ,,,
தூது வந்து சொன்ன மாட புறா
செய்தி கேட்டு புத்தாடை உடுத்து
புதுமலர் சூடி வழிமீது விழி வைத்து
காத்திருகின்றோம் இன்றாவது வருவாயா ,,,,,!!!
,,,,,,சிவமேனகை ,,,,,,,
தந்தை முகம் காண
தவிக்கிறது பிள்ளை
உந்தன் விழி நுகர
துடிக்கின்றது என் உள்ளம் ,,,
எங்கள் நிலை புரிந்தும்
எங்கே அப்பா சென்றாய்
முந்தை வினை முடித்து
விரைவாய் ஓடி வருவாய் ,,,
பாலகியாய் தோள் தாவி
பாடி திரிந்த உன் மகள் இன்று
பாவையாகி நின்று எதிர்
பார்க்கின்றாள் உன்வரவை ,,,
பூக்குட்டியாய் நீ தினமும்
பூசூடி அழகு பார்த்த அவள்
புலரும் பொழுதெல்லாம்
பூவிழியாலே உன்னை தேடுகிறாள் ,,,
தூது வந்து சொன்ன மாட புறா
செய்தி கேட்டு புத்தாடை உடுத்து
புதுமலர் சூடி வழிமீது விழி வைத்து
காத்திருகின்றோம் இன்றாவது வருவாயா ,,,,,!!!
,,,,,,சிவமேனகை ,,,,,,,
No comments:
Post a Comment