Monday, December 2, 2013

,,,பாசம் ,,,,,





,,பாசம் ,,,,

தங்கை பாவம் என்று 
தன் பனை ஓலை பாயை 
தந்து விட்டு சீமெந்து 
நிலத்தில் சிரித்துகொண்டு
கண் உறங்கிய அண்ணா ,,,,,

நாள்முழுதும் வேலைசெய்து
தான் கஸ்ரப்பட்டு கட்டிய வீட்டை
தங்கைக்கு சீதனமாக்கி விட்டு
சிறு குடிசை கட்டியவன் இன்று
சிறு குழந்தைகளோடு வாழ்கின்றான் ,,,

புழுதி அழைந்த தேசத்தையும்
புனிதமான உறவுகளையும் விட்டு
புலம் பெயர்ந்து போன 
தங்கை 

புது மாபிள் பதித்து வீட்டை
புதிதாய் ஊர் வந்தவர்களுக்கு
வாடகைக்கு கொடுத்து விட்டாள்,,,
பாசத்தையும் பாயையும் மறந்து
பஞ்சு மெத்தையில் உறங்குகின்றாள் ,,,,,

,,,,,,சிவமேனகை ,,,,,,

No comments:

Post a Comment