Monday, December 2, 2013

எங்கே என் அழகிய தேசம்

மறக்கமுடியுமா ,,,,
எங்கே என் அழகிய தேசம் ,

கருவறையில் எம்மை தாய் 
சுமந்த கற்பகிரகங்கள்
உரு எடுத்த நாட்களில்
உருண்டு விளையாடிய
உன்னத தாய் நிலங்கள்
பசி எடுத்த வேளையில்
பழங்கள் தந்த பழ மரங்கள்
தினவெடுத்த போதெல்லாம்
தோழர்களோடு முட்டி மோதி
தொங்கி விளையாடிய மரகிளைகள்
அம்மை அப்பனை ஏமாற்றி விட்டு
ஆற்றில் குளித்து மகிழ்ந்த
அந்த இனிமையான நாட்கள்
ஏழ்மையிலும் எம்மை
நலம் வாழ வழி காட்டிய
எளிமையான ஆலயங்கள்
ஏடெடுத்து ஒற்றுமையாய்
ஒன்று கூடி கற்றுமகிழ்ந்த
மரநிழல் வித்தியாலயங்கள்
இவை எங்கே எங்கே எங்கே
மாடி வீட்டில் மகிழ்ச்சி அற்ற
ஏழையாய் வாழ்வதை விட
ஓடி விளையாடி ஆடி பாடி
கூடி தினம் கூழ் குடித்து
குதுகலமாய் குடிசையில்
வாழும் சுகம் தேடுகின்றேன்
எங்கே என் அழகிய தேசம் ,,,,,,

,,,,,,சிவ மேனகை,,,,,,

No comments:

Post a Comment