Tuesday, December 3, 2013

விவாகரத்து தேவையா ,,,,,

விவாகரத்து தேவையா ,,,,,

பிரிந்து போகும் வாழ்கையின் சின்னக்குழந்தைகள் 
அழிந்து போகும் வாழ்கையின் அடுத்த தலைமுறைகள் 
பிஞ்சு மனங்களில் விஷ நஞ்சை விதைக்காதீர்கள் 
மழலைகள் கெஞ்சும் உறவுகளே கொஞ்சம் கேளுங்கள்

சின்னக் குழந்தைகள் அழுகுரல் கேட்கலையோ
சீறி பாய்வதன் விளைவினை உணரலையோ 
சிரித்த முகங்களில் சினத்தின் அறிகுறியோ 
சீர்வரிசை திருமணத்தின் பணத்தின் மறுமொழியோ

விவாகரத்து வினையாகும் விபரீதம் அல்லவா
விடைதேடும்விழிகளின்கண்ணீரின் உறைவிடம்அல்லவா 
கணவன் கருணையில் கண் உறங்கிய காலங்கள் 
கனவில் வரும் போது கற்பனையில் நீ வாழ்வதா ,,

இருப்பதை விட்டு வானில் பறப்பதற்கு ஆசையா 
இல்லத்தின் வெளிச்சத்தை அணைத்து இருளை தேடியா 
எண்ணங்களின் கருவினால் ஏமாற்றம் வந்ததா
எதிர் வீட்டு துரோகியால் எல்லைகள் பிரிந்ததா 

சிந்தித்து பாருங்கள் நீங்களும் சிறப்பான தம்பதிகளே 
சின்னக்குழந்தைகளின் உயிரில் கலந்த உறவுகளே  
உல்லாச வாழ்வில் உலகை வென்றவர்கள் நீங்களே  
செல்லாத காசாய் கல்லான மனத்தோடு வாழ வேண்டுமா ,,,,,
,,,,,,,,,,,,,,,,சிவமேனகை ,,,,,,,,,,

1 comment:

  1. உங்கள் சுதுக்கங்க்களை மட்டும் கணக்கில் போட்டு நீங்கள் செய்யும் செயல்களால் வளைந்து வரும் குழந்தைகள் வளி மாறிப் போறார்கள்

    ReplyDelete